கடலூர், ஏப்.27- கடலூர் பேருந்து நிலை யத்தில் கோட்டாட்சியர் அபிநயா திடீர் ஆய்வு மேற்கொண்டு பய ணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தர விட்டார். கடலூர் திருப்பா திரிப்புலியூரில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப் பட்டுள்ளன. ஆனால் கடையில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் பயணி கள் காத்திருக்கும் நடை பாதையில் வைக்கப் பட்டுள்ளதால் பேருந்துக்காக காத்தி ருக்கும் பொதுமக்கள் நிழலில் நிற்க முடியாமலும், நடைபாதையில் நடக்க முடியாமலும் பயணிகள் அவதிபட்டனர். இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா திடீரென்று பேருந்து நிலையத்திற்குள் சென்றார். பின்னர் நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்ல முடியாம லும், நிற்பதற் கூட இட மில்லாமல் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடை உரிமையாளர்க ளிடம் அங்கு நடப் பாதைகளை ஆக்கிர மித்து பொருட்கள் வைத்தி ருக்கும் நபர்களிடம் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் ஆக்கிர மிப்பு செய்தி ருந்தால் பொது மக்கள் எப்படி செல்வார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் அக்கிரமிப்பு பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட னர். மேலும் ஒரு சிலர் கால அவகாசம் கேட்டு பொருட்களை அகற்றுவ தாக உறுதியளித்தனர்.