சூளகிரி,ஆக.7-
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் பேரிகை, கும்பளம், காளிங்கவரம், அத்தி முகம், புளியரசி, எ.செட்டிப்பள்ளி, பிளம், மைதாண்டப்பள்ளி, பாரண்டப்பள்ளி, சின்னார், காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பல பயிர்களை வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது மழை பெய்யாததால் செடிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்து உள்ளனர். மழை பெய்யவில்லை என்றால் பயிர்கள் வாடி மகசூல் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையில் உள்ளனர்.