செங்கல்பட்டு, ஜன.9- செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர் வெள்ள நீரில் மூழ்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மதுராந்தகத்தில் 12 செ.மீ, செய்யூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் மதுராந்தகம் வட்டம், செய்யூர் வட்டம், திருக்கழுக் குன்றம் வட்டத்தில் பயிரிடப்பட்டி ருந்த நெல், மணிலா, தர்பூசணி, காய்கறி பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியது.பருவ மழை பெய்து ஏரிகள் அனைத்து நிரம்பிய நிலை யில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி நெல் பயிர்களை நடவு செய்து வந்தனர். தற்போது திடீரென கனமழை பெய்ததால் பல ஆயிரம் ஏக்க ரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வெள்ள பாதிப்புகளை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம், மதுராந்த கம் வட்டத்தில் உள்ள தாதங்குப்பம் கிராமத்தில் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். அதேபோல் செய்யூர் வட்டங்களில் கடுமையான பாதிப்பு களை விவசாயிகள் அடைந்துள்ள னர். பாதிப்படைந்துள்ள பகுதி களை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக ஆய்வு மேற்கொண்டு கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.அரிகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.