districts

நடன பயிற்சியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை : மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை

சென்னை,ஏப்.12-  திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்ததை யடுத்து  மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசா ரணை நடத்தினார்.   அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு  தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழ்நாடு அரசிடம் வழங்கி உள்ளது. அந்த அறிக்கை யில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவி கள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள் ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சி யாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள் ளது.   நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர்  மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர்  ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதை யடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை கள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்  படுகிறது.  நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரை யின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி காவல்துறையினர்  ஆலோசித்து வருகின்றனர். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.