சென்னை,ஜூலை 29- சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள “போர் பாயிண்ட்ஸ்” ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி வெள்ளியன்று(ஜூலை 29) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில், மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோவுனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இவரது வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல் இந்திய சி பிரிவு வீராங்க னைகள் ஈஷா கர்வாடே, ஹாங்காங் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் வென்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீராங்கனை பிரதியுஷாவும் வெற்றி பெற்றார். மேலும், ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி பெற்று ள்ளனர். செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக 16 வயதாகும் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தனது அறிமுக ஒலிம்பியாட் போடியில் வெற்றி பெற்று அசத்தினார். அவர் 41 வது நகர்த்தலில் ஐக்கிய அமீரக வீரர் அல் ஹசானியை வீழ்த்தினார். இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் ஆகியோரும் வெற்றி பெற்றுள் ளனர். இந்த வெற்றிகள் குறித்து இந்திய வீரர் சத்வாணி ரவுனக் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,“ புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றோம்” என்றார்.