districts

சென்னை முக்கிய செய்திகள்

29 நாட்களில் 189 உடல் உறுப்புகள் தானம்

சென்னை,ஜன.30- விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவைகளால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகை யில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாற்று உறுப்பு கள் தேவைப்படுவதால் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரி யாதையுடன் இறுதிச் சடங்கு நடை பெறும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேர வையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்த உடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.  தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாடு முத லமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2024 ஜன வரி 1 முதல் 29 ஆம் தேதி வரை யிலான கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் இதுவரை 30 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக தற்போதைய நில வரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 438 பேர், இதயம் 10பேர், நுரையீரல் 13 பேர், எலும்புகள் 17 பேர், தோல் 10 பேர் என தங்க ளது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் புள்ளி விவ ரங்களை வெளியிட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளால் பலர் பயன் அடைந்துள்ளனர்.

இன்று முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

சென்னை, ஜன.30- ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது புதன்கிழமை (ஜன.31) முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை  மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த திட்ட முகாம் நடைபெறும். இது குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர்.

நில விற்பனை கும்பலுக்கு துணை போகும் காவல்துறைக்கு சிபிஎம் கடும் கண்டனம்

 கடலூர்,ஜன.30- எளியவர்களின் நிலத்தை அபகரிக்கும் நில விற்பனை கும்பலுக்கு துணை போகும்  கடலூர் மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர்  கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- மருங்கூர் அருகே உள்ளது செந்தமிழ் நகர். இங்குள்ள வீட்டு மனைகளில் இரண்டரை ஏக்கர் நிலத்தை அபகரிக்க அரசி யல் செல்வாக்கு கொண்ட ரியல் எஸ்டேட் கும்பல் முயற்சிக்கிறது. இதற்காக கடலூர் மாவட்ட காவல்துறை துணையாக நிற்பது பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று செந்தமிழ் நகரில் அமைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட தகர கொட்டகைகள்,  சிமெண்ட் ஸ்லாப், போஸ்ட், நகரின் விளம்பர  பலகை மற்றும் நலச் சங்கத்தின் தகவல் பலகைகளை அடித்து நொறுக்கி, திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ5 லட்சமாகும். இச்சம்பவத்தை திட்டமிட்டு நடத்தி செந்தமிழ் நகரையே சூறையாடிய ஜெய.வெங்கட்ராமன், கீழக்கொல்லை எலிக்குஞ்சு ராஜேந்திரன், அவரது மகன்  தன்ராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வர்கள் மீது நடவடிக்கை கோரி  முத்தாண்டிக் குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர், டிஜிபி, டிஐஜி, எஸ்.பி,  என்று தனித்தனியே தொடர்ச்சியாக புகார் மனு கொடுத்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் ஜோடிக்கப்பட்ட சம்பவத்தை வைத்துக் கொண்டு செந்தமிழ் நகர் வீட்டு மனை உரிமையாளர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தில் நான்கு பேர்  அவர்களது நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு மூத்த பெண்மணி  வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நாளில்  குற்றவாளியாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிகுந்த வேதனையளிக்கிறது. நிலத்தை அபகரிக்க துடிக்கும் ரியல் எஸ்டேட் கும்பல், காவல் துறையும் கைகோர்த்துக் கொண்டு இருப்பது இந்த முதல் தகவல் அறிக்கையின் மூலம் நிரூபணமாகி உள்ளது. செந்தமிழ் நகர் வீட்டுமனை உரிமை யாளர்கள் எளியவர்கள் என்பதால் தொடர் மிரட்டலுக்கும் ஆளாகி வருகிறார்கள். பண்ருட்டி ஒன்றியத்தில் அரசியல் பிரமுகர்கள் செல்வாக்கில் காவல்துறை துணையுடன் ஏழை, எளிய மக்களின் நிலங்கள் பல இடங்களில் கட்டப்பஞ் சாயத்து, மிரட்டல் மூலம் ரியல் எஸ்டேட்  கும்பல் அபகரித்து வருவதாக கூறப்படு கிறது. எனவே ஏழை,எளிய மக்களின் நிலங் களை பாதுகாக்கவும், அந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாதவன் தெரிவித்திருக்கிறார்.