சென்னை, டிச. 28 - அரசுப்பணிகளில் ஒப்பந்த (கான்ட் ்ராக்ட்) முறையை ஒழிக்க முதல மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடி சைமாற்று) வாரிய குடியிருப்புக ளுக்கு 1.50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூ லிக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தை யடுத்து இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான வெற்றிவிழா பொதுக்கூட்டம் திங்க ளன்று (டிச.27) கே.பி.பார்க்கில் நடை பெற்றது. கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசிய தன் சுருக்கம் வருமாறு: முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியால் குடிசைமாற்று வாரியம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகை யில் ஒன்றிய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் ஒப்பந்தம் போட்டன. அதன்படி, பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது, மறுகுடியமர்வு என்ற பெயரில் குப்பைகளை போல் மக்களை கொண்டு சென்று நகருக்கு வெளியே கொட்டுவதை ஏற்கவில்லை. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. இதனால், அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. கே.பி.பார்க் உள்ளிட்ட பகுதி மக்களை நகருக்கு வெளியே கொண்டு செல்லப் படவில்லை. மாறாக, குடியிருக்கும் பகுதியிலேயே வீடுகள் புதுப்பித்தும், புதிய வீடுகள் கட்டியும் கொடுக்கப்படு கின்றன.
கே.பி.பார்க் குடியிருப்பை 2019ஆம் ஆண்டே கட்டி முடித்தாலும் அதிமுக அரசு பயனாளிகளுக்கு ஒதுக்கவில்லை. குடியிருப்பு கட்ட ஒதுக்கிய நிதியில் 40 விழுக்காட்டை அதிமுக அமைச்சர்க ளும், அதிகாரிகளும் கமிஷனாக ஒதுக்கிக் கொண்டனர். இதனால் தரமற்ற வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிஎஸ்டி நிறுவனம் சிமெண்டிற்கு பதிலாக மண்ணை வைத்து சுவற்றை பூசியது. இருப்பினும், சாலையோரம் சாக்கடை யில் அவதிப்படும் மக்களுக்கு வீடுகளை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதேசமயம் பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. மறுபுறம், மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதனால் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த திமுக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கே.பி.பார்க் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் பலனை தமிழக மக்கள் முழுவதும் அனுப விக்கின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்காது. மக்க ளின் உணர்வுகளுக்கும், போராட்டங்க ளுக்கும் மதிப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட் டோரை பாராட்டுகிறோம்.
ஒப்பந்த முறை
அரசு மருத்துவமனைகளில் மருத்து வர் முதல் கடைமட்ட ஊழியர் வரை ஒப்பந்த (கான்ட்ராக்ட்) ஊழியர்களாக பணி நிரந்தரமின்றி உள்ளனர். இதேபோன்று பல இடங்களில் ஊழி யர்கள் பணியாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஒப்பந்த முறையை புகுதியுள்ளனர். அடுத்து ஆட்சிக்கு வந்திருந்தால் அமைச்சரவையே கான்ட்ராக்ட் விட்டிருப்பார்கள். எனவே, இந்த ஒப்பந்த முறையை ஒழிக்க முதலமைச் சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கூட்டணி ஆட்சி நடை பெறும் பாண்டிச்சேரியில், ரேசன்கடை களில் அரிசிக்கு பதிலாக பணம் தரு கிறார்கள். அதிமுக ஆட்சி நீடித்திருந் தால் தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தி இருப்பார்கள். இத்தகைய மோசமான திட்டங்களை ஆட்சி மாற்றத்தின் மூலம் தடுத்துள் ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.செல்வா
.செல்வா கே.பி.பார்க் மக்கள் வீடுகளில் குடியேறவும், கட்டணத்தை ரத்து செய்யவும் கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கம், மனு கொடுத்தல், முற்றுகை, குடியேறுதல் என மக்கள் நடத்திய போராட்டங்களை மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விவரித்தார். அதிகாரிகள், அமைச்சர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி மனு அளித்து நடத்திய பேச்சு வார்த்தை, மாவட்டம் முழுவதும் நடத்திய கிளர்ச்சி பிரச்சாரங்களையும் அவர் விவரித்தார். கே.பி.பார்க் பகுதி யில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை களை முன்மொழிந்த அவர், கட்சிக்கெதிராக அவதூறு பரப்புகிற வர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இந்த கூட்டத்திற்கு கே.பி.பார்க் கிளைச் செயலாளர் த.சித்தார்தன் தலைமை தாங்கினார். பகுதிச் செயலா ளர் கே.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், கே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர் கள் வி.சிந்துஜா, கிளைச்செயலாளர் வி.சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.