மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மறைந்த எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திறப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் ஞாயிறன்று (மே 29) நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி அவரது திருவுருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.