districts

கல்வி நிறுவனங்கள் அருகில் டாஸ்மாக் கடை

புதுச்சேரி, ஆக. 29- சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி,புதுச்சேரி யில் சமய நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து  150 மீட்டர் தள்ளி மதுக்கடைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் கூறியிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒரு தனியார் மதுக்கடை நிறு வனம் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திர சூட்  தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், சமயம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந் துள்ள இடங்களில் குறைந்தபட்ச இடை வெளி விட்டு மதுக் கடைகள் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தர விட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. புதுச்சேரி மாநிலம் 496 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிறிய மாநிலம். 600க்கும் அதிகமான மதுக்கடைகள் உள்ளன. மக்களின் ஆரோக்கியம், சுகா தாரம் ஆகியவை குறித்து கவலைப் படாமல் என்.ஆர். காங்கிரஸ், பாஜக  கூட்டணி அரசு, தடுக்கி விழுந்தால் மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள், ஃபப்பார்கள் என்று மது விற்பனையை பரவலாக்கி யுள்ளது. தற்போது, 1500 பேருக்கு ஒரு மதுக்கடை உள்ளது. ஏற்கனவே சமயம் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து நகரத்தில் 200 மீட்டர், கிராமப்புறங்களில் 300 மீட்டர் இடைவெளியில் தான் மதுக்கடை கள் அமைக்க விதிமுறை இருந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமையி லான ஆட்சியில் நகரத்தில் 50 மீட்டர், இதர பகுதிகளில் 100 மீட்டர் என விதி முறைகள் மாற்றி அமைக்க பட்டது.  அதன் கோர விளைவுகள் அன்றாட மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கி றார்கள். மாணவர்கள் போதைப் பழக்க த்திற்கு  ஆளாவதும், குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துகளில் உயிரிழப்பு, கொலை என பலவிதமான குற்றங்கள் நிகழ்வது புதுச் சேரியில் வாடிக்கையாகிவிட்டது. எனவே மாநில அரசு பள்ளிகள், கோயில் மற்றும் மசூதிகள் அமைக்கப் பட்டுள்ள இடங்களில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மதுக்கடை கள் அமைக்க வழி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மது வணிக வருவாய் நம்பி திட்டங்கள் செயல்படுத்துவது சமூக நீதி பொருளாதாரத்திற்கு எதிரான தாகும். ஆகவே மாற்று பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடவும் , மது வணி கத்தை படிப்படியாக குறைக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.