புதுச்சேரி,அக்.22- மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நலன் களை கருத்தில் கொண்டுள்ளதால் குளறுபடி தொடர்கிறது. நடப்பு ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி சென்டாக் நிர்வாகமும், என்.ஆர்.காங்கிரஸ் அரசும் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. இதனால் சுமார் 358 மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் 27.7.2023 அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2023 -24ஆம் ஆண்டு மருத்துவ மாண வர் சேர்க்கைக்கான இறுதித் தேதி செப்டம்பர் 30.2023 என்றும் அதற்கு மேல் நடைபெறும் மாணவர் சேர்க்கை தகுதியற்றது என்றும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் உத்தரவை மீறி நடை பெறும் சேர்க்கை உச்ச நீதிமன்றத் தின் உத்தரவுக்கு எதிரானது என்றும் அறிவுறுத்தியது. நீட் தேர்வு முடிந்து 2023 -24 கல்வி ஆண்டிற்கான புதுச்சேரி மாநில எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் தகுதி பட்டியல் 05.07.2023 வெளியிடப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு உத்தர வும் 04.09.2023 அன்றே வழங்கப் பட்ட பிறகும் போதுமான கால அவகா சம் இருந்தும் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த காலத்தில் முடிக்க படுவதுதான் தற்போதைய மாணவர்களின் அவல நிலைக்கு காரணம்.
எனவே நடப்பு கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை திட்ட மிட்டே காலம் தாழ்த்திய மட்டுமல்ல முறைகேடுகளும், விதி மீறல்களும் நடந்துள்ளது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட ஞாயிற்றுக்கிழமை (15.10.2023) அதிகாலையில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் சேர்ந்திட சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியது. முன்னறிவிப்பின்றி, அவகாசம் இன்றி அதுவும் விடுமுறை தினத் தில் சேர்க்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேற்படி தேதியில் பணம் கட்ட வாய்ப்பில்லாதவர்கள் அரசு ஒதுக்கீட்டை இழக்க நேர்ந்தது, அந்த வாய்ப்பை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிய முறைகேடும் நடைபெற்றுள்ளது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்களிடம் முறை கேடாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே, மாநில அரசு மற்றும் சென்டர் நிர்வாகத்தின் கள்ளக் கூட்டில் நடைபெறும் முறைகேடுக ளையும் என்.எம். சி யின் உத்தரவை மீறி செப்டம்பர் 30க்கு பின் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமை யில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் 30க்கு பின் சேர்க்கப்பட்டு கேள்விக்குறியாக்க பட்டுள்ள 358 மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க ஒன்றிய பாஜக அரசும் மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் முறை கேடு தனியார் கல்லூரிகள் பெற்றுள்ள பணத்தை திருப்பி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.