districts

பொதுப்பணித்துறையின் மெத்தனமே 5 தொழிலாளர் உயிரிழக்க காரணம்!

 புதுச்சேரி, ஏப்.3- சுவர் இடிந்து உயிரிழந்த 5 தொழிலாளர்களின் மரணத்திற்கு புதுச்சேரி அரசு முழுபொறுபேற்று இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதி  வசந்தம் நகரில், கழிவு நீர் வாய்க்கால்  அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளிகள் மீது மின்துறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்ற கட்டுமான பணியை முறையாக கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனமே இச்சம்பவத்திற்கு காரணமாகும். தொழிலாளர் நலன்களை பாது காத்திட உருவாக்கப்பட்ட தொழிலாளர்  துறை அதிகாரிகளின் செயலின்மையும் தான் இந்த மரணங்களுக்கு காரணம் என்பதை சிபிஎம் கண்டனத்தோடு குற்றசாட்டை முன்வைக்கிறது. இந்த நிகழ்வு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசிற்கு தொழிலாளர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்பதை மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் தொழிலாளர் களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து அரசை வலியுறுத்தி  வரு கிறது. தொழிலாளர்களுக்கு முறை யான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, அதனை தொழிலாளர்கள் பயன்படுத்தி வேலை  செய்கிறார்களா, ஊதியம் முறை யாக வழங்கப்படுகிறதா போன்ற  அனைத்தையும் அரசின் தொழிலா ளர் துறை கண்காணித்து தொழிலாளர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்தகைய நடைமுறையை பின்பற்றாத  ஒப்பந்ததாரர்கள் லாப மடைய குறைந்த கூலிக்கு வெளி  மாநிலங்களிலிருந்து தொழிலாளர் களை அழைத்து வந்து கொத்தடிமை களாக இப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.  தொழிலாளர்களின் பாது காப்பை கண்டுகொள்ளாமல் விடு வதின் விளைவு தான் இத்தகைய மரணங்கள் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகம் இது போன்ற சம்ப வங்களை தடுப்பதற்கு மிக கவனமாக பாதுகாப்பு உபகரணங்கள் பயன் படுத்துவதையும், அபாயகரமான இடங்களில் பணியாற்றும் தொழி லாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். புதுவையில்  பணியாற்றும் வெளிமாநில தொழிலா ளர்களின் கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும். மேலும் இவ்விவகாரத்தை பல  காரணங்களை கூறி ஒரு சிலர் திசை  திருப்ப முயலுவதை மார்க்சிஸ்ட் கட்சி  வன்மையாக கண்டிக்கிறது. பொதுப் பணித்துறை, மின்துறை, தொழிலாளர் நலத்துறை என  அரசுதுறைகளின் நேரடி அலட்சியத்தால் நடைபெற்ற இந்த மரணங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று காரணம் கூறி கைகழுவி விடாமல் புதுச்சேரி அரசு  முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்குவதில் உள்ளூர் வெளிமாநிலத்தவர் என்ற பாகுபாடு இல்லாமல்  நிவாரணம் வழங்கும் வகையில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.