கள்ளக்குறிச்சி, டிச.4- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குன்னத்தூர் கிளை சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒன்றிய குழு உறுப்பினர் தணிகாசலம்,முன்னிலை ராமகிருஷ்ணன்.இதில் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாதுஎன முழக்கங்களை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன். ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிளை செயலாளர் கொடியான், ஏழுமலை ,ஹரி , சீனிவாசன் , கிராம பொதுமக்கள் ஆகியோர் பூர்த்தி செய்த மனுக்களை உதவி மின் பொறியாளரிடம் கொடுத்தனர்.