districts

img

வெள்ள நிவாரணம் கேட்டு புதுச்சேரியில் சிபிஎம் ஊர்வலம்

புதுச்சேரி, டிச.30- பெஞ்சல் புயல் வெள்ளத்  தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி சிபிஎம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை மூத்த தலைவர் முருகன் துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநிலத்தில்  நவ.30, டிச.1ஆகிய இரண்டு நாட்களில் பெஞ்சல் புயல், பெருமழை வெள்ளத்தால் பல ஆயிரம் ஏக்கரில்  பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை,மரவள்ளி உள்ளிட்ட பயிர் வகைகள்  மழை நேரில் மூழ்கி வீணாகியது. அதேபோல் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்து மின் சாதன பொருட்கள் துணிமணிகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள்  சேத மாகியது. எனவே அரசு அனைவருக்கும் ரூ.5ஆயி ரம் வழங்கிவிட்டு பெரு மளவில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு இன்னும் போதிய இழப்பீடு வழங்கா மல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்,  பாதிக்கப்பட்ட வர்களின் பொருட்கள் குறித்து  வட்டாட்சியர் களைக் கொண்டு ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலி யுறுத்தி  இப்போராட்டம்  நடைபெற்றது.  புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் . மூத்த தலை வர்கள் முருகன், சுதா, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ், கொளஞ்சியப்பன், சத்தியா, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு உழ வர் கரை நகர செயலாளர் ராம்ஜி, இடைக்குழு செய லாளர்கள் ரகு. அன்பு மணி, ராமமூர்த்தி, சர வணன், மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் சங்கர், சரவணன் ஆனந்த்,கலியன், மதிவாணன், இளவரசி, உமாசாந்தி,சஞ்சய் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்ற னர்.  ஆட்சியருடன் தலைவர்கள் சந்திப்பு இறுதியாக போராட்டத் தின் நிறைவில் சிபிஎம் தலைவர்கள் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புயல் நிவார ணம் மனுக்களை  பெற்றுக் கொண்ட ஆட்சி யர், இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.