மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ராயபுரம் 49ஆவது வட்டத்தில் வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் திமுக பகுதிச் செயலாளர் இரா.செந்தில்குமார், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் பி.செல்வம், எம்.அண்ணாமலை, எம்.எஸ்.ஜுகைப், கே.செல்வானந்தன், பூர்ணசந்திரன், கலை சேகரன், திமுக வட்டச் செயலாளர் காட்டன் சதீஷ், காங்கிரஸ் வட்டச் செயலாளர் உபயதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்