விழுப்புரம், மார்ச்.23- விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார், அதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.