மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா, மக்கள் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே அண்மையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் வரவேற்றார். எ.வாசுதேவன் முன்னிலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநாயினார், இ.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் ரூ.8 லட்சம் சிபிஎம் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ்,ஆர்.மதுசூதனன், வட்டச் செயலாளர்கள் ப.வடிவேலன், எஸ்.பழனி, இ.விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.