வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் ராயபுரத்தில் புதனன்று (ஏப். 17) பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், பி.செல்வம், எம்.அண்ணாமலை, எம்.ஜுகைப், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எம்.தமீம்சேட்டு, கே.பலராமன், கே.செல்வானந்தன், என்.ராஜேஷ், எஸ்.பாப்பு, பி.கண்ணன், ஆட்டோசங்க நிர்வாகிகள் குட்டி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.