கடலூர் ஜவான் பவன் அருகில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், பொதுக்குழு உறுப்பினர் விக்ரமன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் செந்தில் (விசிக), சண்.முத்துகிருஷ்ணன் (பாமக), சுந்தரமூர்த்தி (அமுமுக), மூர்த்தி (மநீமை), எழிலேந்தி (திக), ரஹீம் (மநேமக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.