சென்னை, டிச. 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு கி.தமிழ்ச்செல்வன் வெள்ளியன்று (டிச.1) காலமானார். அவருக்கு வயது 58. மார்க்சிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக்குழு உறுப்பினர், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் செயல் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் தோழர் தமிழ்ச்செல்வன் செயலாற்றி வந்தார். அண்மையில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செய லாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம், கே.வனஜகுமாரி, ச.லெனின், எஸ்.குமார், செந்தில்குமார், சுந்தர், ம.சித்ரகலா, வேளச்சேரி பகுதிச்செயலாளர் எஸ்.முகமது ரஃபி, எம்.சரஸ்வதி எம்.சி., சிஐடியு மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம் மற்றும் எம்.ஆர்.சுரேஷ் (வாலிபர் சங்கம்), எஸ்.சரவணசெல்வி (மாதர் சங்கம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா மற்றும் ஹசன் மௌலானா எம்எல்ஏ, திமுக பகுதிச் செயலாளர் கபிலன், விசிக மாவட்ட நிர்வாகிகள் வளவன் சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.