கடலூர்,ஜன.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு கூட்டம் சிபிஎம் அலுவலகத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையன், சுப்புராயன், திருஅரசு, ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . தீர்மானங்கள் சமீப காலங்களில் பருவம் தவறி பெய்த மழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் பயிர்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.மணிலா, உளுந்து, காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெல் பயிரில் புகையான் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டது. கரும்பு வேர் அழுகல் நோயால் கரும்பு விவசாயி கள் கடும் சேதாரத்துக்கு உள்ளானது.மக்காச்சோளம் பயிர் முழுவதும் அமெரிக்க படைப்புழுவால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழக அரசு வேளாண் துறை தோட்டக்கலை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு, மக்காச்சோளம், நெல் பயிரிட்ட விவ சாயிகளுக்கும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நிவாரண வழங்க வேண்டும். நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலை யத்தில் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட சுப்ரமணியன் மரணத்திற்கு காரணமான வடலூர் ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி மற்றும் 302 கொலை வழக்கு பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் அடுத்த இரண்டு மாதங்களில் வழக்கை கடலூர் எஸ்.சி/ எஸ்.டி நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே கொலை குற்றவாளி ராஜா மற்றும் இரண்டு காவலர்களை பணி நீக்கம் செய்யவும், சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதை தடுக்கவும், தமிழக அரசு காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.