சென்னை,ஏப்.4- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர்-எர்ணாவூர் பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் ஜெயராமன் வலியுறுத்தியிருக்கிறார். திருவொற்றியூர் எர்ணீஸ்வரர் நகர், மாகாளியம்மன் நகர், திருவீதியம்மன் நகர், பஜனைகோயில் தெரு, பிருந்தா வன் நகர் காமராஜ் நகர், கன்யாலால் லேஅவுட் ஆகிய பகுதிகளில் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், மாணவர் ்கள் பேருந்துகள் மூலம் பயணித்து பள்ளிகளுக்கும் கல்லூரிக ளுக்கும் கட்டுமான வேலைகளுக்கும் செல்கின்றனர். போதுமான அளவு பேருந்து வசதி இல்லாததால் காலையி லும் மாலையிலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எர்ணாவூர் பேருந்து மார்கெட்டிலிருந்து 56 எப், மற்றும் 28 கட் சர்வீஸ் புறப்பட்டன. தற்போது அந்த வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது. எண்ணூரில் இருந்து வரும் பேருந்துகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்டன. எனவே ரத்து செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டும், எண்ணூரில் இருந்து வரும் பேருந்து களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று போக்கு வரத்து மண்டல மேலாளர் ரமேஷிடம் மனு கொடுத்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பாக்கியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.