கிருஷ்ணகிரி,செப்.18- கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டேரி ஊராட்சி வனப்பகுதியை ஒட்டி உள்ளது ஒன்னகரை கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க வலியுறுத்தி இரண்டு மாதத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த சாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மன்ற கூட்டத்தில் மனு அளித்து நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று ஒன்றிய தலைவர் உஷாராணி குமரேசன் தலை மையில் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்த னர். பிறகு, முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ. 81.60 லட்சத்தில் ஒன்ன கரைக்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிர காசம், ஊராட்சி மன்றத் தலைவர் விஜய குமார், துணைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்னகரை தம்பிதுரை சேட்டு செல்வம் ஒப்பந்ததாரர் அழகேசன் கலந்து கொண்டனர்.