வட சென்னை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் 7ஆவது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் அருமைராஜ், பி.சுரேஷ், தாமோதரன், இ.நாகராஜன், திமுக வட்டச் செயலாளர் கார்த்திக், கோமலவள்ளி, வெங்கட், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.