மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு அண்ணாநகர் பகுதி, தா.பி.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஎம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் தா.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தரம் தொடங்கி வைத்தார். அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பெ.சீனிவாசன், பெரியசாமி, கிளைச் செயலாளர்கள் ஆபேல் பாபு, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.