districts

img

பாஜக அரசை எதிர்த்து பர்கூரில் சிபிஎம் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி,செப்.5- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பர்கூரில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை எதிர்த்து வருகிற 7 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தை விளக்கியும் பர்கூரில் புதிதாக அமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு சார்பில் பேருந்து நிலையம், பாரத மாதா கோவில் சர்க்கிள், கூட்ரோடு, மல்லப்பாடி ,சிகரலப்பள்ளி, வெங்கட சமுத்திரம்,கொத்தள குட்டை சந்திப்பு, மத்தூர் ஜெகதேவி உள்ளிட்ட 12 இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.  வட்டச் செயலாளர் டி.சீனிவாசன் தலை மையில் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், கிருஷ்ணகிரி வட்டச் செய லாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பி னர் லெனின் முருகன்,வட்டக் குழு உறுப்பினர்கள் எல்லப்பன், சக்கர வர்த்தி,மல்லிகா, முனிராஜ், சதீஷ், திருப்பதி, ராஜ்குமார், இளவரசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.