வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் 4ஆவது வார்டு முல்லை நகரில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, குமார்,ஆரோக்கியசாமி, மணிவாசகம், மணி, திமுக நிர்வாகி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.