திருவள்ளூர், ஜூலை 20-
சிபிஎம் கிளை செயலாளர் இளையராஜா (42), காலமானார். அவரின் உடல் வியாழனன்று (ஜூலை 20) அடக்கம் செய்யப் பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சோழ வரத்தை அடுத்த கொடிப்பள்ளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர் தோழர் இளையராஜா திடிரென புதனன்று (ஜூலை 19), இரவு காலமானார். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன், மாவட்டக் குழு உறுப்பினர் அ.பத்மா உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கொடிப்பள்ளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வியாழ னன்று அடக்கம் செய்யப்பட்டது.