கடலூர்,நவ.30- நகர் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியர் அருண் தம்பு ராஜை சந்தித்து நேரில் மனு அளித்துள்ள னர். அதன் விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் 5000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தனிநபர் மற்றும் சுகாதார கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் பல முறை யிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை யடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இந்த சந்திப்பின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, கிளைச் செயலாளர் வேல்முருகன், வெங்கடேசன், இளைய ராஜா, பரமசிவம் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.