திருவள்ளூர், டிச.28- ஒன்றிய பாஜக அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (டிச 28), கும்மிடிப்பூண்டியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக மோடி அரசு கொண்டு வந்துள்ள உள்ள ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (டிச 28), கும்மிடிப்பூண்டியில் உள்ள மின் உதவி செயற்பொறியாளரிம் மனு அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கவரைப்பேட்டை உதவி செயற்பொறி யாளரிம் மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பி னர்கள் டி.கோபாலகிருஷ்ணன், ப.லோக நாதன், ஜோசப், குப்பன், சீனு, எல்ஐசி ஊழியர் செல்வகுமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.