districts

img

திருவொற்றியூர் ஜோதி நகரில் வீடுவீடாக சிபிஎம் வாக்குசேகரிப்பு

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திருவொற்றியூர் ஜோதி நகரில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் வெங்கடையா, ஆரோக்கியசாமி, தனலஷ்மி, திருநீர்செல்வம், மதன், அம்பேத்கர், முரளி, ராமமூர்த்தி, சாரங்பாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.