விழுப்புரம்,ஜன.25- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி.சஞ்சய் வி.கங்காபூர் வாலா வியாழனன்று (ஜன.25) அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்று நட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், நீதியரசர். எம்.தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி, டி.பரத சக்கரவர்த்தி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.