districts

img

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: பிடிஓ அலுவலகம் முற்றுகை

கடலூர், செப்.8- 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறி கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சான்றோர் பாளையம் ஊராட்சி யில் 100 நாள் வேலை முறையாக வழங்கக் கோரியும் மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு கூட வேலை வழங்க வலியுறுத்தியும் முறை கேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலை வரை கண்டித்தும், பதிவு செய்த அனை வருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, முறை யாக வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், விவசாய சங்க பொருளாளர் எஸ். தட்சிணா மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ராஜேஷ் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் பாண்டியன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, உமா, சத்தியவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.