சென்னை, பிப். 1 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு, மக்கள் தொகை அல்லது வாக்கா ளர் எண்ணிக்கை அடிப்படை யிலா என்பது குறித்து விளக்க மளிக்க சென்னை மாநக ராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நக ராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 விழுக் காட்டிற்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. இதன்டிப்படையில், சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் பெண்க ளுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மொத்தம் உள்ள இடங்களின் அடிப்படையில் 50விழுக் காடு பெண்களுக்கு ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதன் அடிப்படை யில் ஜன.17ம் தேதி வார்டு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப் பட்டது. இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜன் என்ப வர் வழக்கு தொடர்ந்தார். அதில், ஒரு சில மண்டலங்க ளில் பெண்களுக்கு 50 விழுக்காட்டிற்கு குறைவாக வும், சில மண்டலங்களில் அதிகமாகவும் ஒதுக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை பின்பற்றாமல், புள்ளி விவர ஆதாரங்கள் இல்லா மல் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதை ரத்து செய்து, பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த வேண்டும். அதுவைரயில் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை செவ்வா யன்று (பிப்.1) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணி க்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டனர். வழக்கு விசார ணையை பிப்.3ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.