districts

img

காஞ்சிபுரத்தில் சாலையில் வழிந்தோடிய கழிவு நீர்

காஞ்சிபுரம், நவ.12- காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23-வது வார்டு நேதாஜி தெரு வில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் மாநகராட்சிக்கு சென்று கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக புகார் மனு அளித்தனர். சுமார் 4 மாதங்கள் கடந்த பின்பும் கழிவு நீரை அகற்ற  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த பகுதியில் பாதாள சாக் கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு  நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல்,  வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டு பல்லவர் மேடு  அருந்ததி பாளையம் என்ற பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தேங்கும் மழை  தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்து உள்ளனர். மாவட்டத்தில் காலை முதலே கன மழையானது பெய்ய தொடங்கி அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி சனிக் கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள லிங்கப்பன் பாளையம் தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை  சிறிய மின் மோட்டார் மூலம் மாநக ராட்சி ஊழியர்கள் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். அப்போது   மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது அந்த மோட்டார் சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாந கராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர். பின்னர் ஒரு வழியாக மோட்டாரின் ஒரு பகுதியில் பொருத் தப்பட்டிருந்த குழாய் மூலம் மழை நீரானது உறிஞ்சப்பட்டு மற்றொரு குழாய் மூலம்  பக்கத்து தெருவிற்கு வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது குழாயில்  இருந்த ஓட்டை வழியாக மழைநீர்  பீச்சி அடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் மழை நீர் தேங்கி நின்ற  இடத்திற்கே மீண்டும்  வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த  ஆட்சியர் ‘இவ்வாறு இருந் தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும், மின் மோட்டாரின் இயக்கத்தை நிறுத் தச் சொல்லுங்கள். பணியினை சரியாக  மேற்கொள்ளுங்கள்’’ என மாநகராட்சி  ஆணையாளரிடம் கூறினார்.  மழை  நீர் வெளியேற்றும் பணியினை  மாநக ராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே கையாண்டு வருகிறது என்பதற்கு மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வின் போது நடந்தவையே சாட்சி என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.