சென்னை, ஜன. 30 - ஏரியா சபை உறுப்பினர் பட்டியலுக்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் திங்களன்று (ஜன.30) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்தும், வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை செயலாளராக நியமித்து ஏரியா சபைகளை நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.