மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி கடைகளின் தொழில், வணிக உரிமங்களை புதுப்பிக்க கட்டிடத்தின் சொத்துவரி கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும், இரவு நேரக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய அரசாணை பிறப்பித்திருந்தும் காவல்துறை அத்துமீறலை தடுக்க வேண்டும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கடைகளை ஏலமின்றி ஆண்டாண்டு காலமாக கடை நடத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளிக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார். மாநில பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில இணைச் செயலாளர் வி.பாலசண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.