சென்னை, ஏப். 22 - சென்னை ஐஐடி-யில் மாணவர்கள், ஊழியர்கள் என 30 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறை ந்து வந்தது. கட்டுபாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் முகக்கவசம், தனிமனித இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ துறை வலியுறுத்தி யது. இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத் தில் படிக்கும் மாணவிகள் சில பேருக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவில் 3 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து பாதிக்கப் பட்டுள்ள மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விபரங்கள் கண்டறி யப்பட்ட 18 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட 12 பேருக்கும் லேசான பாதிப்பு உள்ளதால் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப் படுத்தப்பட்டனர். இதனை யடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ் ணன், ஐஐடி வளாகத்தை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்த 2 ஆயிரம் பேரு க்கு பரிசோதனை செய்யப் பட உள்ளது. 666 பேரை பரிசோதித்த தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாணவர்கள், ஊழியர்கள் என 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஐஐடி வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால், அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.