சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிவு வெளியேறியதில் பாதிக்கப்பட்ட மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் செல்வகுமாரி, கஸ்தூரி, பாக்கியம், புஷ்பா, விஜயா உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.