திருவள்ளூர், பிப் 2- ஒன்றிய அரசின் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புது நகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 3 அலகுகளில் தலா 500மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், கொதிகலன் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றி வருகின்றனர். 10ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று (பிப் 2), ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி கேட் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் சிரமத்துடன் பணி யாற்றி வருவதாகவும், விபத்துக்களில் தொழிலாளர்கள் பாதிப்படைவதாகவும் உரிமம் இல்லாமல் ஆபத்தான முறை யில் வேலை வாங்கும் அனல் மின் நிலைய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தொழி லாளர்கள் தொடர்பாக எந்த பதிவுகளும் இல்லாத நிலையில் முறையாக பதிவு செய்து அனைவரையும் நிரந்தர தொழி லாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, கிளை செய லாளர் சதிஷ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் இரவு மற்றும் மறுநாளும் தொடரும் என்பதால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும் என்கின்றனர்.