districts

img

ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 18 - அரசு மருத்துவமனைக ளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 21  ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஊதியமாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்க ளன்று (ஜூலை 18) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டு 15க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில்  பணியாற்றிய ஒப்பந்த ஊழி யர்களில் விடுபட்டவர்க ளுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும், 10 வருடம் வேலை செய்த வர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பெண்கள் ஆடை  மாற்றுவதற்கு அறை ஒதுக்க வேண்டும், இஎஸ்ஐ,  பிஎப் உள்ளிட்ட சட்ட சலு கைகள், பணி பாதுகாப்பு உபகரணங்கள், வார விடு முறை, பண்டிகை விடு முறை, மருத்துவ விடுமுறை களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. பெருநகர சென்னை அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  சிஐடியு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சி.திரு வேட்டை, பொருளாளர் எஸ்.சந்தானம், துணைத் தலைவர்கள் எம்.வி.கிருஷ்ணன், பட்டாபி, துணைச் செயலாளர் இரா. அருள்குமார், அரசு ஊழியர்  சங்க மாவட்ட நிர்வாகி விவே கானந்தன் உள்ளிட்டோர் பேசினர்.