சென்னை ஐஐடி-யில் தொடரும் தற்கொலைகள்!
சென்னை, டிச. 20- சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தொடர்ந்து நிகழும் தற்கொலைகளால் சென்னை ஐஐடி நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த வகையில், செவ்வாயன்று (டிச. 19) ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி கல்வி நிறுவனங் களுக்கு என ஒரு சிறப்பிடம் இருக்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதாது. அந்நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அங்கு கல்வி பயில அனுமதி கிடைக்கும். ஐஐடிகளில் சேர்வதற்காகவே பிரத்யேக கோச்சிங் சென்டர்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். ஐஐடி நிறுவனங்களில் பயின்றால் நிச்சயம் பெரிய நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கும் என்பது மாணவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு ஐஐடி நிறுவனங்களில் சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு அதிகளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. சாதி ரீதியாக, மதரீதியாக பாரபட்சம் காட்டப்படுவது இதுபோன்ற தற்கொலைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், படிப்புச் சுமை, அதீத மன அழுத்தம் உள்ளிட்டவையும் மாணவர் தற்கொலைகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடியில் ஒரு மாணவர் கடந்த செவ்வாயன்று தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (31). இவர் சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை பயின்று வந்தார். தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே சச்சின் குமார் ஜெயின் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நண்பர்கள் கேட்ட போதும், அவர் பேச மறுத்துள்ளார். இந்தச் சூழலில், செவ்வாயன்று தனது நண்பர்களுடன் வழக்கம் போல் சச்சின் குமார் ஜெயின் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால், கல்லூரியில் வகுப்பு தொடங்கும் முன்பே அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், அவரது நண்பர்கள் கல்லூரி முடிந்து இரவு வீட்டுக்கு சென்று பார்த்த போது, சமையலறையில் மாணவர் சச்சின்குமார் ஜெயின் தூக்கில் தொங்கிய தாக கூறப்படுகிறது. சடலத்தை பார்த்து அலறிய அவரது நண்பர்கள், காவல் துறை யில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல் துறையினர், மாணவர் சச்சின் குமார் ஜெயினின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை ஐஐடியில் பிடெக் 3ஆம் ஆண்டு பயின்று வந்த ஆந்தி ராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் கடந்த மாதம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடப்பாண்டில் மட்டும் 3 மாணவர்கள் அடுத்த டுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி வெட்டிக்கொலை
சென்னை, டிச. 20- சென்னை பாரிமுனை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார். இவருக்கும் புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி சேட்டு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார் புதன்கிழமை அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது கூட்டாளிகள் வசந்தகுமார் மற்றும் நரேஷ்குமார் ஆகியோரும் உடன் வந்தனர். கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு ரிப்பன் மாளிகை மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் நடுவே உள்ள தந்தூரி உணவகத்தின் மேல் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கினர். பிரேம்குமாரை மட்டும் வெளியே இழுத்து வந்து கொடூரமாக வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதில் வசந்த குமார், நரேஷிற்கும் வெட்டுவிழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியமேடு காவல் துறையினர் பிரேம் குமாரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரேம்குமார் உயிரிழந்தார். நரேஷ், வசந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தினசரி ஆயிரக்கணக் கானவாகனங்கள் செல்லக்கூடிய பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் சென்னை பெருநகர காவல்ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகம்உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுமக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரையோரப் பகுதிகளில் எண்ணை கழிவுகள் அகற்றம் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர், டிச. 20- திருவள்ளூர் மாவட்ட கடற்கரை பகுதியில் எண்ணை கழிவுகள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் , மீன்வளத்துறை , வருவாய்த்துறை மற்றும் மீனவர்களுடன் ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அப்போது அவர் கூறியதாவது: கடந்த மிக்ஜம் புயல் வெள்ளத்தின் போது, எண்ணூர் கடற்கரைப்பகுதியில் எண்ணை கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த எண்ணை கழிவுகள் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கடற்கரைப்பகுதியில், கலந்துள்ளதா என்பதை கடந்த ஒரு வாரமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி பொறியாளர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கழிவு எண்ணெய் மீன் திசுக்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மீனவர்களுக்கு இருக்க கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தொடர்ந்து 15 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
கடலூர்,டிச.20- பேருந்தில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலியானார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்மண்டலம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று சாலையில் விழுந்தார். அப்போது வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த மாணவர் நெல்லிக்குப்பம் அடுத்த வைடிப்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்வா, வயது 19 என்பதும் கடலூர் வண்ணார பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
தேசிய மின் சிக்கன வார விழா
கடலூர்,டிச.20- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் சார்பாக திருப்பாதிரிப்புலியூரில் தேசிய மின் சிக்கன வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தலைமை பொறியாளர் பூ.காளிமுத்து தலைமை தாங்கினார். கடலூர் மேற்பார்வை பொறியாளர் கோ.சதாசிவம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். செயற்பொறியாளர் ஆர். வெங்கடேஸ்வரன், உதவி செய்ய பொறியாளர் ஆர். ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பயணி தவறவிட்ட தங்க சங்கிலியை ஒப்படைத்த நடத்துனர்
கிருஷ்ணகிரி, டிச. 20- கோவை உடுமலைப் பேட்டையை சேர்ந்த வசந்த குமார் டிச. 17 அன்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பெங்களூருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது, இரண்டு சவரன் தங்க சங்கிலியை தவற விட்டுள்ளார். அதை பேருந்தில் கண்டெடுத்த கோவை பணி மனையைச் சேர்ந்த அந்த பேருந்தின் நடத்துனர் லோக நாதன், இதுகுறித்து பணி மனை மற்றும் கட்டுப் பாட்டுக்கு தகவல் தெரி வித்துள்ளார். இதையடுத்து, சங்கி லியை தொலைத்த வசந்த குமாரிடம் பேருந்து ஓட்டுநர் சிவகுமார், ஓசூர் கிளை மேலாளர் முகமது ஜாபர் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.