districts

கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி

திருவொற்றியூர் , 18- திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கண்டெய்னர் லாரி சென்றுக் கொண்டிருந்தது.லாரியை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் புகழேந்தி (22) ஓட்டிச் சென்றார். திருவொற்றியூர் அருகே எண்ணூர் விரைவு சாலை, திருச்சினாங்குப்பம் பகுதியில் லாரி சென்றுக் கொண்டிருந்த போது திடீரென வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இதில் ஒட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி அந்த வாலிபர் மீது மோதியது.  லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அவர்  சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் பலியான வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவரது உடல் பிரேத பரிசோனைக்காக ஸ்டான்லி  அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியான வரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

;