districts

img

கட்டுமான தொழிலாளர் தொழிலாளர்கள் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி, பிப்.18 - கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை டி.குமார் கொடி யேற்றி வைத்தார்.  என். சண்முகம் தலைமை வகித்தார். எ.அய்யாதுரை வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.செந்தில், துணை செயலாளர் வி.சாமிநாதன், எம். சுப்பிரமணி, வி.ரீட்டா, ஷேக் சலாவுதீன், மாவட்டத் தலைவர் எஸ்.சேகர் , மாவட்டத் துணைத் தலைவர் ஏ.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் ஆர் பச்சையப்பன் மாவட்டப் பொருளாளர் வி.ராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். நலவாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் பதிவுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும். கம்பி, மணல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 3000 வழங்க வேண்டும். 55 வயதாகும் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.