districts

img

விரைவில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி ப.விமலா கேள்விக்கு மேயர் ஆர்.பிரியா பதில்

சென்னை, ஜூன் 30 -

      கார்னீஷ் நகர் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று மேயர் ஆர்.பிரியா தெரி வித்தார்.

    சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 30) நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய உறுப்பினர் ப.விமலா, 41வது வார்டுக்கு உட்பட்ட கார்னீஷ் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்தம் கோரப்படாமல் உள்ளது. கட்டிட பணி எப்போது தொடங்கும்? என்று கேட்டார்.

    அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ2.35 கோடி செல வில் கட்டப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை 6.6.23 அன்று  பிடிஎம் நிறுவனம் எடுத்துள்ளது.

    தரைதளத்தில் அங்கன்வாடி மையமும், மூன்று தளங்களில் தலா 3 வகுப்பறைகள் வீதம் 9 வகுப்பறைகள் கட்டப்படும். ஒவ்வொரு தளத்திற்கும் கழிப்பிட வசதி இருக்கும். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. புதிய கட்டிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்.

    துணைக் கேள்வி எழுப்பிய விமலா, “வட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து உதவி பொறியாளர், செயற்பொறியாளர், மன்ற உறுப்பினர் என யாருக்கும் தகவல் தெரியவில்லை. இதனால், மன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ2.25 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டது. அதனை தற்போது இடித்துள்ளீர்கள். இதனால் மக்கள் பணம் விரயமாகி உள்ளது.

    வார்டுகளில் தற்போதுதான் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிற துறை ஊழியர்கள் புதிய சாலைகளை தோண்டி பணிகளை மேற்கொள்கின்றனர். துறை களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பணம் விரயமாகிறது. இதனை சரிசெய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள மன்ற உறுப்பினர்களில் 3 பேர் தாய்மை அடைந்துள்ளனர். பச்சை குழந்தைக ளோடு வந்து பரிதவிக்கின்றனர். மன்ற கூட்டரங்கிற்கு அருகே அவர்கள் பயன்பாட்டிற்கு ஒரு அறையை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.

    இதற்கும் பதிலளித்த மேயர், “உறுப்பி னரின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.