சென்னை. செப்.10- சென்னை எழும்பூரில் இந்தியாவின் முதல் கட்டுமானப் பொருள் மற்றும் உள் அலங்கார பொருட்கள் அடங்கிய ‘பில்ட் ஹெச்கியூ’ என்ற விற்பனை வளாகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலியா ஆலோச கர் சாரா கிர்லேவ் ஆகியோர் திறந்து வைத்தனர். ருக்மனி லட்சுமிபதி சாலையில் 55,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் தரைவிரிப்பு கள், திரைச்சீலைகள், கட்டில் நாற்காலிகள், ஹோம் தியேட்டர், டைல்ஸ் கற்கள், குளியலறை சாதனங்கள் என ஒருவீடு கட்ட தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. 40க்கும் மேற்பட்டட கடைகள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இதுபோன்ற கடை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று இதன் நிர்வாகி வெங்கட சுப்பிரமணி யன் கூறினார்.