திருவண்ணாமலை நகரம் காந்தி நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. காங்கேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா. பாரி, மாவட்ட துணை தலைவர் எம். வீரபத்திரன், நிர்வாகிகள் கே. சரவணன், கமலக்கண்ணன், எம். பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.