districts

img

கடலூர் மக்களவைத் தொகுதியில் காங். வேட்பாளராக விஷ்ணுபிரசாத்

கடலூர்,மார்ச் 24 - கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி யில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட எம்.கே.விஷ்ணு பிரசாத் (வயது 51) வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். விஷ்ணு பிரசாத் திரு வண்ணாமலை மாவட்டம், செய்யாரை சேர்ந்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் செய்யாறு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஆரணி நாடாளு மன்ற தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.  மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவரான விஷ்ணு பிரசாத் காங்கி ரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ண சாமியின் மகனும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துநரும் ஆவார்.