districts

img

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு நகர்புறபகுதி மக்கள் உற்சாக வரவேற்பு

திருவள்ளூர், ஏப். 3- திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு நகர்புற பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.  மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெற்குன்றம், சோழவரம், பாடிய நல்லூர்,  மொண்டியம்மன் நகர், ஆலமரம், சோலையம்மன் நகர்,  எடப்பாளையம், கே.கே.நகர், அலமாதி, காரனோடை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் திமுக சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன், சோழ வரம் ஒன்றிய செயலாளரும் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரவி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.இதில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் பி.சி.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.