சென்னை, ஜூன் 25 -
கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடிய தால் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் குமார் - ஆனந்தன் ஆகியோரின் 24வது ஆண்டு நினைவு ரத்ததான முகாம் ஞாயிறன்று (ஜூன் 25) தரமணியில் நடை பெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிக்குழுவும், கஸ்தூரிபாய் காந்தி அரசு தாய்சேய் நல மருத்துவமனையும் இணைந்து இந்த முகாமை நடத்தின.
சங்கத்தின் பகுதித் தலைவர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா, காவல்துறை துணை ஆணையர் பி.மகேந்திரன், துணை ஆணை யர் அமீர் அகமது, தரமணி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்முருகன், மக்க ளுக்கான மருத்துவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.காசி, சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, மருத்துவர் உமா மகேஸ்வரன் வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் எல்.பி.சரவணதமிழன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பொருளாளர் எஸ்.திவாகர், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஜானகி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் சூர்யா, பகுதிக்குழு உறுப்பினர் என்.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.