சிஐடியு மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெறுவதையொட்டி தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி பயணம் வியாழனன்று (அக். 27) அவரது நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது. வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகே சிஐடியு ஒருங்கிணைப்பு குழு தலைவர் டி.வெங்கட் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வட சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், மாநிலக் குழு உறுப்பினர் கே.ரவிச்சந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.